visitors flags

free counters

Friday, September 7, 2012

நான் சத்ய சுப்பிரமணியம் ஜோசியர் சித்தர் வழி சித்த வசியத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கு, நான் உங்களுக்கு சரியான அதிசயம் திருப்புமுனையை 7 நாட்கள் முதல் 41 நாட்களில் கொடுக்க முடுயும் பிரச்சனைகள் :

அன்புடையீர்,

நான் சத்ய சுப்பிரமணியம் ஜோசியர் சித்தர் வழி சித்த வசியத்தில்  அனைத்து பிரச்சினைகளுக்கு, நான் உங்களுக்கு சரியான அதிசயம் திருப்புமுனையை 7 நாட்கள் முதல் 41 நாட்களில் கொடுக்க முடுயும்
பிரச்சனைகள் :
1. ராகு, கேது, செவ்வாய் தோசம் காரணமாக தாமதமாக திருமணம்
2. வர்த்தகம் மேம்படுத்த, செல்வம், உடல்பினி,செய்வினைபோக்க,  
3. கணவன் மனைவி பிரச்சனைகள் விவாகரத்து தவிர்த்து வாழ.
4. 7.1/2 சனி சிக்கல்
5. ஆய்வுகள் மேம்படுத்துவதற்கான
6. குழந்தை பெறுவதற்கான, மாணவர்கள் முதல் மதிப்பெண்பெற 
7.காதல் கைக்கூட ,ஆண் பெண் வசியம்
பின்வரும் பிரச்சனைகளுக்கு, வாழ்கையை மேம்படுத்த அதிசய திருப்புமனை நீங்கள் 7 நாட்கள் முதல் 41 நாட்களில் அடையமுடியும்.

1. குபேர வசிய அஞ்சனம் , தாயத்து ,சக்கரம -செல்வம், பணம் மற்றும் சொத்துக்கள் சேர்க்க மற்றும் கை விட்டு போகாமல் இருக்க போனவற்றை திரும்பும் பெற.

2. ராஜ வசிய அஞ்சனம் ,தாயத்து , சக்கரம்  - அரசியலில் முன்னேற்றம் பெற / வேலைகள் கிடைக்க மற்றும் வேலை உயர்வூபெற  மாமியார் மருமகள் ஒன்றுசேர
.

3. ரதி, மன்மதன் வசிய அஞ்சனம் , தாயத்து , சக்கரம்  - காதல் வெற்றி பெற , பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர ,தாம்பத்தியம் சுகம் பெற ,காம இச்சைபெற பெருக ,ஆண் , பெண் மலட்டு தன்மை போக்க ,விவாகரத்து ,கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்க்க.

4.நீலாம்பானு அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - கிரக தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக 7.1/2 சனி (7.5 sani, ashtama sani) போன்ற பிரச்சினைகலில் இருந்தும் ,ராகு - கேது தோசம் மற்றும் செவ்வாய் தோஷம் காலசர்பதோசத்தில் இருந்து விடுபட .

5. சரஸ்வதி அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆய்வுகள்,போட்டி ,தேர்வில் வெற்றி பெற முன்னேற்றம் அடைய படிப்பு வராத மாணவர்கள் முதல் மதிப்பெண்பெற
,

6. மகாலக்ஷ்மி அஞ்சனம் , தாயத்து ,சக்கரம் - தொழில் வளர்ச்சி பெற,செல்வம் செழிக்க,கடன் தொல்லை நீங்க.   

7. தன்வந்தரி அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - அனைத்து வகையான நோய்களில் இருந்து விடுவிப்பதற்காக.
.

8. ஸ்ரீ துர்காதேவி அஞ்சனம் ,
தாயத்து ,சக்கரம் - எல்லாவிதமான தாமதிக்கும் திருமணம்
பிரச்சனை மற்றும விரைவில் திருமணம் நடக்க செய்யும்.

9. புத்திர பாக்ய அஞ்சனம் , தாயத்து , சக்கரம் -ஆண் பெண் மலட்டு தன்மை குறை மற்றும் தோஷம் போக்க, குழந்தை.பாக்கியம் பெற.

10.சத்துரு சம்ஹார அஞ்சனம் , தாயத்து , சக்கரம்  - வணிக வெற்றி பெற போட்டி மற்றும் எதிரி பிரச்சனை சமாளிக்க,.ஏமாற்றிய சொத்து திரும்பபெற ,மற்றும் பல பிரச்சனைகளுக்கு என்னை அனுகுக ........

அன்புடன்,

குரு சத்ய சுப்ரமணியம்,

மொபைல்: 08123939323
மின் அஞ்சல்: subramanim34@yahoo.in

Thursday, September 6, 2012

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை வருகிறது!!!


ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை வருகிறது!!!





நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.
பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.
ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:
1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.
இந்த ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 8.9.12 சனிக்கிழமை முழுவதும் இருக்கிறது,
சனிக்கிழமை இராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 வரையிலும் வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.
இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
 
1.வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
 
ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 8.9.12 சனிக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.
சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில்(காலை 9 முதல்  10.30க்குள்)மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஓம்சிவசிவஓம்

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்


கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்:








கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.


நந்தன ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:


21.9.12 வெள்ளி காலை 9.24 முதல் 11.24 வரை;

1.10.12 திங்கள் இரவு 7 முதல் 9 வரை;

13.10.12 சனி காலை 6.16 முதல் 8.16 வரை;மதியம் 12.16 முதல் 2.16 வரை; மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

18.10.12 வியாழன் காலை 8 முதல் 11 வரை;

27.10.12 சனி காலை 6.02 முதல் 7.32 வரை;காலை 11.32 முதல் மதியம் 1.32 வரை;மாலை 5.32 முதல் இரவு 7.32 வரை;நள்ளிரவு 11.32 முதல் 1.32 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.12 முதல் 7.12 வரை;

15.11.12 வியாழன் காலை 6.15 முதல் 8.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 3.25 முதல் 5.25 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 

ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்

ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாஷிங்டன்:ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், ""உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர்.
இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.thanks:dianamalar 3.9.12                                                                                                           ஆன்மீகக்கடலின் கருத்து: தனி மனித மனநிலை தான் தேசத்துக்கும் பொருந்தும்: அமெரிக்கா உலகின் பணக்கார நாடாக இருப்பதால்,நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் அழுகுரல் அதற்கு ஒரு போதும் கேட்காது.எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அது சுயநலமாக மட்டுமே நடந்து கொள்ளும்.ஆனால்,இந்தியாவாகிய நாம்,எப்போதும் பிற நாடுகளுக்கு உதவி செய்தே பழகிப் போனோம்;இதுவே இந்து தர்மத்தின் அடையாளங்களில் ஒன்று ஆகும்.சீனாவையும் ஒரு போதும் நம்பக்  கூடாது.

மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்


மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்

காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்த நண்பர் எப்போதுமே, "டிப்ரஷன்' - "மன அழுத்தம்... மன அழுத்தம்' என்று கூறிக் கொண்டே இருப்பார். மகிழ்ச்சி என்பது துளிகூட கிடையாது அவரிடம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மன அழுத்தத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் போக்கிக் கொள்ள, போதையில் மூழ்கி விடுவார்.
இப்பிரச்னையிலிருந்து அவரை மீட்க முடிவு செய்து, நண்பரான மன நல மருத்துவர் ஒருவரை அணுகினேன். 
மருத்துவரிடம் விஷயத்தை கூறினேன். போலீஸ் அதிகாரியை அழைத்து வர நேரம் கொடுத்தார். பின் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, "நம்மில், யாருக்கு வருத்தம், கஷ்டம் இல்லை! நாம் அனைவருமே உழைப்பது, கஷ்டப்படுவது எதற்கு? நாமும், நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கத் தானே!' எனக் கேட்டார்.
பெரியதாக தலை ஆட்டினேன்.
அவரே தொடர்ந்தார்:
வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம். நாம் எப்படி இருக்கிறோமோ, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று, எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும். நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கை எவ்வளவு அரிய நல்ல விஷயம் என்று நாம் புரிந்து கொள்ள, நினைவுபடுத்திக் கொள்ள, 25 வழிகள் சொல்கிறேன், என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சொன்னார்...



* இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவ்'வாக இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே, செய்து விடுவர்; அவர்களிடம், "பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?

* சின்ன, சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். ஓவர் டேக் செ#ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து, அடுத்த ரயிலில் போகலாமே!

* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

* புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் செ#யாத படுக்கை, இதேபோல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

* "நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், "பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.

* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

* நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

* வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.

* நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!
* நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை.' வருபவர்
களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!  

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=11921&ncat=2

யாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படைவெட்டி கோவிலில் பரபரப்பு

யாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படைவெட்டி கோவிலில் பரபரப்பு


பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள மாவிலிங்கை அருள்மிகு படைவெட்டி அம்மன் கோவிலில் நடந்த யாகத்தின்போது அம்மன் தோன்றி நடனமாடிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் மட்டவறை எனும் இடத்தில் படைவெட்டி அம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் கடந்த 10ம் தேதி அன்று பாராயணம் என்ற பூஜை நடந்தது.

காஸ் தீர்ந்தும் எரிந்த அடுப்பு :

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் ஸ்ரீராம் என்பவர் இக்கோயிலில் யாகம் நடத்திபோது யாக தீயில் அம்மன் நடனமாடிய காட்சி தோன்றியது. இதை அவர் தனது மொபைலில் போட்டோ எடுத்தார். இதைத்தொடர்ந்து பௌணர்மி அன்று மாலை 5 மணியளவில் இரவு பூஜைக்காக மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவர் (பிரசாதம்) பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் காஸ் தீர்ந்து அடுப்பு எரிவது நின்றது. இதையடுத்து ஸ்ட்வை ஆப் செய்த விஜயா, ரெகுலேட்டர் வயரை கலட்டி வைத்துவிட்டு, மாற்று சிலிண்டர் கொண்டு வருமாறு அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்த சிறிது நேரத்தில் காஸ் ஸ்ட்வ் சிலிண்டர் இல்லாமல் எரிவது கண்டு திடுக்கிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா ஓடிச்சென்று கோயிலுக்கு வந்திருந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். பொதுமக்கள் திரளாக நின்று இந்த அதிசய சம்பவத்தை பார்த்தனர். இதைபார்த்த பெரியம்மாபாளையம் கிராமத்தை கார் டிரைவரான நந்தகுமார் தனது மொபைலில் இக்காட்சியை போட்டோ எடுத்துள்ளார். அடுத்தடுத்து இக்கோயிலில் அதிசய சம்பவங்கள் நடந்து வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து துறைமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்) கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு ஆவணி மாதம் பௌணர்மி அன்று எனது கனவில் தோன்றி படைவெட்டி அம்மன் மாவிலிங்கை கிராமத்தில் தனக்கு வழிபாடு நடத்தாமல் தனது கோவில் சிதிலமடைந்து கிடப்பதாகவும், தனக்கு பூஜை நடத்துமாறும் தெரிவித்தார். இதையடுத்து கனவில் வந்த ஊருக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது கனவில் வந்த காட்சி அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து 2011ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும், 2012ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினேன். 

தற்போது கோலாட்டத்துடன் பூஜை வேண்டும் :


அம்மன் எனது கனவில் தோன்றி ஒவ்வொரு வாரமும் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அதன்படியே ஒவ்வொரு வாரமும் பூஜை நடைபெறுகிறது. தனக்கு பட்டு வேண்டும் என்றும், மூன்று மேளம் வைக்குமாறும் தெரிவித்தது. தற்போது கோலாட்டத்துடன் பூஜை வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இக்கோயிலுக்கு வழிபாடு செய்த சிறுமி ஒருவர் அங்கிருந்த ஏழு சிறுமிகளை பிரகாரம் வரை அழைத்து சென்று ஒவ்வொரு வாசல்படியிலும் அமர வைத்து முகத்தை கழுவி விட்டு பூஜைசெய்தது. அம்மன் வேண்டுகோள்படி அனைத்தையும் நிறைவேற்றி வருகிறேன். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதால் அம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிசயங்கள் நடந்து வருகிறது என்றார். thanks:dianamalar 3.9.12

Monday, September 3, 2012

சித்தர்களின் வீடாக இருக்கும் சதுரகிரியில் ஒரு சித்தர் சூட்சுமமாக நடந்து செல்வதை ஒரு பக்தர் வீடியோ எடுத்து யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார்.பார்க்கலாமா?





சித்தர்களின் வீடாக இருக்கும் சதுரகிரியில் ஒரு சித்தர் சூட்சுமமாக நடந்து செல்வதை ஒரு பக்தர் வீடியோ எடுத்து யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார்.பார்க்கலாமா?

மொபைல் போனை தூக்கி போடுங்கள் ! நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம்



மொபைல் போனை தூக்கி போடுங்கள் ! நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம் :


புதுடில்லி: பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்பர் . இது போல் இன்றைய காலத்தில் போன் இல்லாதோருக்கு முன்னேற்ற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் மொபைல் போன் முழு அங்கமாகி விட்டது.

இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும் நம்மை அறியாமலே நமக்கு பெரும் கேட்டினை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்து விடுகின்றனர். இதுவும் இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து தூங்குபவர்களும் உண்டு. குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது விடிய, விடிய போய்ச்சேரும் ( எடுத்துக்காட்டு பாலச்சந்தரின் அழகன் திரைப்படம்) இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் மொபைல் போன் தரும் தீமைகள் குறித்து மத்திய அரசே எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் மொபைல்போன் பயன்பாடு மற்றும் ரேடியேஷனில் இருந்து தப்பிக்க வழி கூறியிருக்கிறது. இதன் விவரம் வருமாறு :


மூக்கு கண்ணாடி அணிபவரா நீங்கள் ? * முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும். * நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. * குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும்.


* போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.


காக்கை , குருவிகள் மடிந்தன: இன்றைய உலகில் வானில் பறவைகளை÷யே காண முடியவில்லை. இந்த மொபைல் டவர் வெளியிடும் கண்ணுக்கு தெரியாத அலைகள் பல்வேறு பறவைகளை அழித்து வருகிறது. சிட்டுக்குருவி முழுமையாக முடிந்து போனது. காகத்திற்கு சோறு போட வேண்டுமானால் பல மணி நேரம் மொட்டை மாடியில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. கா, கா என்று அழைத்தாலும் வர மறுக்கிறது. காரணம் எண்ணிக்கை வீழ்ச்சியில் இருக்கிறது என்பதே ! கூரையில் சோறு போட்டால் ஆயிரம் காக்கை என்ற பழமொழி எல்லாம் மறந்து விட வேண்டியதுதான். காக்கை , குருவிகள் கழுகு, பருந்து உள்ளிட்டவை அழிந்து வரும் நிலையிலல், மனிதர்கள் இதனை விட கூடுதல் பலம் இருப்பதால் அதிக கெடுதல் விரைவில் தாக்காமல் இருக்கிறது என்பதுதான் உண்மை ! நீங்கள் இனி எப்படி மொபைல் போன் பேசப்போகிறீர்கள் ?   http://siddharkuberavasiyam.blogspot.

Sunday, September 2, 2012

நான் சத்ய சுப்பிரமணியம் ஜோசியர் சித்தர் வழி சித்த வசியத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கு, நான் உங்களுக்கு சரியான அதிசயம் திருப்புமுனையை 7 நாட்கள் முதல் 41 நாட்களில் கொடுக்க முடுயும்

அன்புடையீர்,

நான் சத்ய சுப்பிரமணியம் ஜோசியர் சித்தர் வழி சித்த வசியத்தில்  அனைத்து பிரச்சினைகளுக்கு, நான் உங்களுக்கு சரியான அதிசயம் திருப்புமுனையை 7 நாட்கள் முதல் 41 நாட்களில் கொடுக்க முடுயும்
பிரச்சனைகள் :
1. ராகு, கேது, செவ்வாய் தோசம் காரணமாக தாமதமாக திருமணம்
2. வர்த்தகம் மேம்படுத்த, செல்வம், உடல்பினி,செய்வினைபோக்க,  
3. கணவன் மனைவி பிரச்சனைகள் விவாகரத்து தவிர்த்து வாழ.
4. 7.1/2 சனி சிக்கல்
5. ஆய்வுகள் மேம்படுத்துவதற்கான
6. குழந்தை பெறுவதற்கான, மாணவர்கள் முதல் மதிப்பெண்பெற 
7.காதல் கைக்கூட ,ஆண் பெண் வசியம்
பின்வரும் பிரச்சனைகளுக்கு, வாழ்கையை மேம்படுத்த அதிசய திருப்புமனை நீங்கள் 7 நாட்கள் முதல் 41 நாட்களில் அடையமுடியும்.

1. குபேர வசிய அஞ்சனம் , தாயத்து ,சக்கரம -செல்வம், பணம் மற்றும் சொத்துக்கள் சேர்க்க மற்றும் கை விட்டு போகாமல் இருக்க போனவற்றை திரும்பும் பெற.

2. ராஜ வசிய அஞ்சனம் ,தாயத்து , சக்கரம்  - அரசியலில் முன்னேற்றம் பெற / வேலைகள் கிடைக்க மற்றும் வேலை உயர்வூபெற  மாமியார் மருமகள் ஒன்றுசேர
.

3. ரதி, மன்மதன் வசிய அஞ்சனம் , தாயத்து , சக்கரம்  - காதல் வெற்றி பெற , பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர ,தாம்பத்தியம் சுகம் பெற ,காம இச்சைபெற பெருக ,ஆண் , பெண் மலட்டு தன்மை போக்க ,விவாகரத்து ,கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்க்க.

4.நீலாம்பானு அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - கிரக தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக 7.1/2 சனி (7.5 sani, ashtama sani) போன்ற பிரச்சினைகலில் இருந்தும் ,ராகு - கேது தோசம் மற்றும் செவ்வாய் தோஷம் காலசர்பதோசத்தில் இருந்து விடுபட .

5. சரஸ்வதி அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆய்வுகள்,போட்டி ,தேர்வில் வெற்றி பெற முன்னேற்றம் அடைய படிப்பு வராத மாணவர்கள் முதல் மதிப்பெண்பெற
,

6. மகாலக்ஷ்மி அஞ்சனம் , தாயத்து ,சக்கரம் - தொழில் வளர்ச்சி பெற,செல்வம் செழிக்க,கடன் தொல்லை நீங்க.   

7. தன்வந்தரி அஞ்சனம் , தாயத்து , சக்கரம் - அனைத்து வகையான நோய்களில் இருந்து விடுவிப்பதற்காக.
.

8. ஸ்ரீ துர்காதேவி அஞ்சனம் ,
தாயத்து ,சக்கரம் - எல்லாவிதமான தாமதிக்கும் திருமணம்
பிரச்சனை மற்றும விரைவில் திருமணம் நடக்க செய்யும்.

9. புத்திர பாக்ய அஞ்சனம் , தாயத்து , சக்கரம் -ஆண் பெண் மலட்டு தன்மை குறை மற்றும் தோஷம் போக்க, குழந்தை.பாக்கியம் பெற.

10.சத்துரு சம்ஹார அஞ்சனம் , தாயத்து , சக்கரம்  - வணிக வெற்றி பெற போட்டி மற்றும் எதிரி பிரச்சனை சமாளிக்க,.ஏமாற்றிய சொத்து திரும்பபெற ,மற்றும் பல பிரச்சனைகளுக்கு என்னை அனுகுக ........

அன்புடன்,

குரு சத்ய சுப்ரமணியம்,

மொபைல்: 08123939323
மின் அஞ்சல்: subramanim34@yahoo.in